தமிழ்நாடு

நள்ளிரவில் வீடு புகுந்து சேவல்கள் திருட்டு - துரத்தி சென்ற அதிமுக பிரமுகருக்கு வெட்டு

கரூரில் நள்ளிரவில் வீடு புகுந்து கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கரூரில் நள்ளிரவில், வீடு புகுந்து, கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை, துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை, அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி, அதிமுக செயலாளராக உள்ள வேணுகோபால், 10க்கும் மேற்பட்ட கட்டு சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 6 பைக்கில் வந்த 12 மர்ம நபர்கள், சேவல்களை திருடி சென்றுள்ளனர். அவர்களை வேணுகோபால் துரத்தி சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். வேணுகோபால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு