தமிழ்நாடு

செல்போனில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் "செல்போன் சாமியார்"..!

கரூரில் சாமியார் ஒருவர் செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

தந்தி டிவி

ஸ்ரீசத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் சாமியாராக இருப்பவர், பாபாஜி. பொறியியல் படிப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தற்போது ஆன்மிகத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்து, செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதனால், உள்ளூர் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இவரை அழைக்கின்றனர்.

பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாபாஜி, தொடக்கத்தில் ஒரு பக்தராகத்தான் சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அப்போது கோவிலில் பூஜை செய்ய வேண்டியவர் வெளியூர் சென்றிருந்ததால், அன்று மட்டும் இவர் பூஜை செய்துள்ளார். காலப்போக்கில் பாபாஜியாக மாறி, அங்கேயே தங்கிய அவர், பின்னர் செல்போன் மூலம் அருளாசி வழங்கத் தொடங்கினார். இதையடுத்து, செல்போன் சாமியார் என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்