Karur | Mariamman Temple | கரூர் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம் #karur #mariammantemple #thanthitv உச்சி வெயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் கரூர் மாவட்டம் புகழூர் நானபரப்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கரூரில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்த போதிலும், ஏராளமான பக்தர்கள் 'ஓம் சக்தி' கோஷத்துடன் தீக்குண்டத்தில் இறங்கித் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். குழந்தை வரம் பெற்ற தம்பதியினர் பச்சிளம் குழந்தைகளுடன் பூக்குழியில் இறங்கினர். கரூர் மாவட்டத்தில் பெண்கள் தீக்குண்டத்தில் இறங்கும் ஒரே கோவில் இது என்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.