தமிழ்நாடு

இடிந்துவிழும் நிலையில் வீடுகள் | பரிதவிக்கும் மக்கள்-பரிதாப காட்சிகள்

கரூர் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அந்த வீடுகளின் மேற்கூரைகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கான்கிரீட் மேற்கூரையும் விரிசல் விட்டு காணப்படுவதால், மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், அச்சத்துடனே இரவில் தூங்க வேண்டிய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. மேலும், அப்பகுதியில் சாக்கடை வசதி, சாலை வசதியின்றியும் இருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதிகளை செய்துத் தந்து, இடியும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்