கரூர் மாவட்டம் கீழ் முனையனூரில், 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 50 கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஒரே இடத்தில் இத்தனை கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால், பண்டைய நாகரிகம் தொடர்பான மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.