கரூரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய நகர பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே போக்குவரத்து துறையின் நோக்கம் என்று தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் மக்கள் நல பணிகளே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அதிமுக பெற்ற 100 சதவீத வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்தார்.