தமிழ்நாடு

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரையில், கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரையில், கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தாக்கல் செய்த மனுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை வைக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மனுதாரர் கோரும் இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ சிலை வைக்க அனுமதிப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்