தமிழ்நாடு

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரையில், கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரையில், கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தாக்கல் செய்த மனுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை வைக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மனுதாரர் கோரும் இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ சிலை வைக்க அனுமதிப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்