தமிழ்நாடு

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கோலாகலம்

திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.

தந்தி டிவி

திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 252 - ஆவது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகியோரது ஜெயந்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் திருவாரூரில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சிகள் தியாகராஜர் கோவிலில் கடந்த 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிரபல கர்நாடக இசைப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் பாட்டு கச்சேரியும், அக்கரை சகோதரிகள் என்று அழைக்கப்படும் எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எஸ்.சொர்ணலதா குழுவினரின் வயலின் கச்சேரியும் நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்