தமிழ்நாடு

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடகா அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த புதிய அணையால் கிருஷ்ணகிரி பகுதியில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்த பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதோடு,தமிழக விவசாயிகள் நலன், மாநில உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என செய்தி குறிப்பில் உறுதி அளித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ