தமிழ்நாடு

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடகா அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த புதிய அணையால் கிருஷ்ணகிரி பகுதியில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்த பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதோடு,தமிழக விவசாயிகள் நலன், மாநில உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என செய்தி குறிப்பில் உறுதி அளித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி