தமிழ்நாடு

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 55 வயதானவர் மீது போக்சோ வழக்கு - போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி

காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி பூக்காரதெருவை சேர்ந்த விஜயன், தன் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 12 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிக்கவே விஜயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது விசாரணைக்கு பயந்து போன விஜயன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை