தமிழ்நாடு

பெற்றோரின் 50வது மணநாள் விழாவுக்கு வந்த மகன் பலியான பரிதாபம்

தாய், தந்தையின் 50வது திருமண நாளை கொண்டாட டெல்லியில் இருந்து குமரி வந்த மகன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

புலியூர்குறிச்சி...கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது...டெல்லியில் வசிக்கும் சதீஷ், பெற்றோரின் 50வது திருமணநாளை கொண்டாட சொந்த ஊரான புலியூர்குறிச்சிக்கு குடும்பத்துடன் வந்தார்.... வீட்டருகே உள்ள தெப்பகுளத்தில் உறவினர்களுடன் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக சதீஷின் மகன் அனீஷ்(19) குளத்தில் மூழ்கினார்.

அதிர்ச்சியடைந்த சதீஷூம் அவரது உறவினர் அகிலேஷூம் அனீஷை மீட்க சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்களும் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்ற உதவி செய்தனர். கரை சேர்ந்த 3 பேருக்கும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்தார்.

மற்ற 2 பேரின் உயிரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், தனியார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் காலியானதால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்த உறவினர்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்ததால் அங்கு கடும் வாக்குவாதம் உருவானது. இதனால், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி