கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம் ஆழ்கடல் பகுதியில் தத்தளித்து வந்த நிலையில், 220 பேரும் நான்கு தனியார் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், கடலில் விடப்பட்ட 22 விசைப்படகுகளையும் மீட்டு தர கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒன்பதிற்கும் அதிகமான விசைப்படகில் உள்ள மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அவர்களையும் மீட்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.