தமிழ்நாடு

தந்தை கொல்லப்பட்ட வழக்கில் மகன் கைது : 9 ஆண்டுகளுக்கு பின்பு துப்புதுலங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஆரையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 9 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் கிருஷ்ணனின் மகன் ஷாஜியின் நண்பரான வினு, ஒரு மாதத்திற்கு முன் மாயமானார். அதைத் தொடர்ந்து, ஷாஜி தலைமறைவானதால், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குமரி மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சொத்துக்காக தந்தையை 9 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்ததாகவும், அதை அறிந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய வினுவை, 20 நாட்களுக்கு முன்பு கொலை செய்ததாகவும், ஷாஜி கூறியுள்ளார். இதையடுத்து ஷாஜியை போலீஸார் கைது செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு