தமிழ்நாடு

தந்தை கொல்லப்பட்ட வழக்கில் மகன் கைது : 9 ஆண்டுகளுக்கு பின்பு துப்புதுலங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஆரையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 9 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் கிருஷ்ணனின் மகன் ஷாஜியின் நண்பரான வினு, ஒரு மாதத்திற்கு முன் மாயமானார். அதைத் தொடர்ந்து, ஷாஜி தலைமறைவானதால், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குமரி மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சொத்துக்காக தந்தையை 9 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்ததாகவும், அதை அறிந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய வினுவை, 20 நாட்களுக்கு முன்பு கொலை செய்ததாகவும், ஷாஜி கூறியுள்ளார். இதையடுத்து ஷாஜியை போலீஸார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை