தமிழ்நாடு

கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை

கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் அலைகள் அதிகமாக இருக்கும் என்று கூறும் அவர்கள், ஓகி புயலால் பாதிக்கப்பட்டதிலிருந்தே கோரிக்கை முன்வைத்து மனு அளித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தங்கள் பகுதிக்கு வரும் அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவதாக வேதனை தெரிவிக்கும் கடியபட்டணம் மக்கள், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரிடமும் மனு அளித்த பயனில்லை என்றனர். உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், எத்தனை நாள் இப்படி வாழ்வது என்றும் அவர்கள் வேதனை ​தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்