தமிழ்நாடு

கன்னியாகுமரி : கப்பல் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 25-சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 25-சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் அருகே சலேட் நகர் பகுதியை சேர்ந்தவர் இன்ஃபன்ட் விஜூ. கப்பலில் பணியாற்றும் இவர் அருகில் உள்ள தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதேபோல் அவரது சகோதரர் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு வீடுகளிலும் பின்பக்க கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. இதுதொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி