• கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விளம்பர பலகை அமைப்பதில், அதிமுகவின் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
• ஒரே இடத்தில் விளம்பர பலகை அமைப்பது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தரப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த போலீசார், புதிதாக விளம்பர பலகை அமைக்க வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.