கன்னியாகுமரி அருகே மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணி என்ற காவலர், தமக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை அறிந்து மன உளைச்சலில் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்த சக காவலர்களை, உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.