நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற அந்தியோதயா ரயில் மீது கற்களை வீசிய வடமாநில வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஆரல்வாய்மொழி அருகே வந்த ரயில் மீது கற்களை வீசியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து பயணி ஒருவர் காயமடைந்தார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒடிசாவை சேர்ந்த பாபுரா பாராபோகே தண்டவாளத்தில் அமர்ந்து நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து ரயில் மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.