தமிழ்நாடு

தூத்துக்குடி : மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் கனிமொழி

தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி நேரில் பார்வையிட்டார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி நேரில் பார்வையிட்டார். எழில் நகர், குறிஞ்சி நகர், லூர்தம்மாள்புரம், மரைக்காயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் பாதிக்கப்படவர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை சந்தித்த கனிமொழி மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி திமுக ஆட்சியில் தூத்துக்குடியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தாலே மழை வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு