பெண்களுக்கான புதிய பாதைகளை அமைக்க தொடர்ந்து முயற்சிப்பேன் என்று வீராங்கனை விருதி குமாரி தெரிவித்தார். அபுதாபியில் நடைபெற்ற கலப்பு தற்காப்பு கலை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை விருதி குமாரி வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு சென்னை சேத்துப்பட்டில் ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட திமுக எம்பி கனிமொழி, விருதி குமாரிக்கு பரிசுகளை வழங்கினார்.