காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ 4ம் நாள் காலை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மஞ்சள், நீல நிற பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, பஞ்சவர்ணப்பூ மாலைகள் திருவாபரணங்கள் அணிந்து, வெள்ளி சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவியுடன், ஸ்ரீ பரமபத நாதன் கோலத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.