தமிழ்நாடு

உடல்நலக்குறைவால் மனமுடைந்த தாய் - மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரத்தில் உடல்நலக்குறைவால் மனம் உடைந்த தாய், தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாகாளியம்மன் தெருவை சேர்ந்த ரேணுகா, கணவன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரேணுகா, தனது இளைய மகள் புவனாவுடன் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றார். எனினும் குணமடையாததால் ரேணுகாவும் அவரது இளைய மகள் புவனாவும் மனவுளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கணவர் மற்றும் மூத்த மகள் வீட்டில் இல்லாத நேரத்தில், புவனாவுடன் ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியில் இருந்து வீடு திரும்பிய ரேணுகாவின் கணவர் அன்பு, கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை