தமிழ்நாடு

சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைப்பு - இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்

காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே இரவு நேரத்தில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியபேட்டை பகுதியில், திராவிடர் கழகம் சார்பில் கடந்த 1998-ஆம் ஆண்டு, பெரியார் சிலை அமைக்கப்பட்டது. தற்போது பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்திற்காக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பெரியார் சிலையின், கை பகுதியை சேதப்படுத்தி உள்ளனர். இதை கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலை அடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்