தமிழ்நாடு

திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் பொறியியல் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த சையத், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். தனது அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக் கொண்டு வெளியே வந்த போது, சாவியை உள்ளே வைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மொட்டை மாடியில் இருந்து கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி, அறைக்குள் சென்று சாவியை எடுக்க முடிவு செய்த சையத், மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில்,14வது மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் தலை சிதறி உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை