தமிழ்நாடு

காதலித்து திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் தம்பதியர் மனு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

* காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

* இதற்கு பிரியாவின் தந்தையும், காவல்துறை உதவி ஆய்வாளருமான விஸ்வநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மகளை தேடி வந்துள்ளார்.

* இந்நிலையில் பிரியாவும்,அவரது கணவரும் பாதுகாப்பு கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

* மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். இவரும் அவரது நண்பர் பசுபதியும் நண்பர்களாக இருந்தனர்.

* இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

* அப்போது கிரீஷ், பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, இன்று காலை கிரீஷிடம், தாயை ஆபாசமாக திட்டியது பற்றி பசுபதி கேட்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது பசுபதி, கிரீஷின் தலையை கோடரியால் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட மலவள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

* பின்னர், கொலை செய்தது பற்றி கூறி, போலீசாரிடம் பசுபதி சரணடைந்துள்ளார். இந்த பயங்கர கொலை சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு