இரண்டு இடங்களில் காத்திருப்பு கூடங்கள் திறப்பு : அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் காத்திருப்பு கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், வடக்கு மாட வீதி அண்ணா அவின்யூவிலும், டோல்கேட் வாழைத்தோட்டம் அருகேயும் இந்த கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெயிலில் சாலை ஓரங்களில் காத்திருந்த பக்தர்கள், தற்போது நிழற்கூடங்களில் காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.