தமிழ்நாடு

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி உயிரிழப்பு : 24 குண்டுகள் முழங்க உடல் தகனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கோவை கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்ட பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்படும் அண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி