தமிழ்நாடு

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடை உடுத்தி, ஆண்டாள் கிளி, மயில் இறகுடன், பஞ்ச வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதன் அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டதால், வழக்கமாக 5 மணிக்கு தொடங்கும் தரிசன நேரம் மாற்றப்பட்டு, 7 மணிக்கு மேல் தரிசனம் தொடங்கியது. 17ஆம் தேதியோடு உற்சவம் நிறைவடைய உள்ளதால், அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை