தமிழ்நாடு

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - இளைஞர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது நடத்தப்பட்ட, கொடூரத் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றி வரும் ஜெயந்தி சீனிவாசன் மேல் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன், இவருக்கும் அதே குடியிருப்பின் வசித்து வரும் ஓய்வுபெற்ற காவலரின் மகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஓய்வுபெற்ற காவலரின் மகன், ஜெயந்தியை கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் தாளம்பூர் காவல் நிலையத்தில், ஜெயந்தி புகார் அளித்தார். அதில், தன்னை தாக்கிய ஓய்வுபெற்ற காவலரின் மகன், கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதை தட்டிக் கேட்டபோது தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்