தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலில், தொடங்கிய இந்த கூட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்றைய தினம் 3 அமர்வுகளாக சுமார் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்திகள், வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பணிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பேசிய கமலஹாசன், கூட்டணி குறித்து கவலையில்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாமே

வெல்வோம் என்றும், மக்களை நம்புவோம்... தேர்தலை சந்திப்போம் என்றும் பேசி உள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு