தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலில், தொடங்கிய இந்த கூட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்றைய தினம் 3 அமர்வுகளாக சுமார் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்திகள், வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பணிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பேசிய கமலஹாசன், கூட்டணி குறித்து கவலையில்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாமே

வெல்வோம் என்றும், மக்களை நம்புவோம்... தேர்தலை சந்திப்போம் என்றும் பேசி உள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை