தமிழ்நாடு

கமல் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

இந்து தீவிரவாதம் பற்றி பேசிய, கமல் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

தந்தி டிவி

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்பேரில், மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக 153 ஏ, 295 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோல, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். கமல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.

இதற்கிடையே, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா கட்சியின் தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை, நாளை நடைபெறுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை