தமிழ்நாடு

முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு

முன்ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன், மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

கமல்ஹாசன் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விடுமுறை கால அமர்வில் வழக்கு தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க இயலாது எனவும், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் கூறினார்.

இதனையடுத்து கமல்ஹாசன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மனுவில் உறுதி அளித்துள்ள கமல்ஹாசன், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி