தமிழ்நாடு

கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்

கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தந்தி டிவி

கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த குப்தா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உங்களுக்கு என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்ப, தாம் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் விளக்கம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கமல் பேசிய வீடியோ ஆதாரத்தை சமர்பிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்