மதுரை அழகர்கோவிலில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது. கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் மேளதாள பரிவாரங்களுடன் ஆலய உட்பிரகாரத்தில் உலா வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வரும் 29-ஆம் தேதி தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வரும் மே ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.