கள்ளச்சாராய வழக்கின் முக்கிய குற்றவாளியிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும், சின்னதுரையிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அக்கராயபாளையம் பகுதியில் சின்னதுரை தனது இருச்சக்கர வாகனத்தில், கஞ்சாவுடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சின்னதுரையிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.