Kallakurichi | Fire Accident | ஸ்கூல் அருகே தீப்பற்றி எரிந்த லாரி.. அலறிய மக்கள்.. பரபரப்பு காட்சி
கள்ளக்குறிச்சியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பற்றிய நிலையில், சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததுடன், சாலையில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினர், லாரியில் பற்றி எரியும் தீயை போராடி அணைத்தனர்.