தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூங்குழலி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூங்குழலி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கணித தேர்வு எழுதிவிட்டு விடுதி அறைக்கு சென்ற பூங்குழலி வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவி ஒருவர், அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்த நிலையில் பூங்குழலியின் உடல் தொங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், தங்களிடம் கேட்காமல் எப்படி உடலை கொண்டு வரலாம் என்று கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் சாவுக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"