தமிழ்நாடு

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்... 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தந்தி டிவி

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் புகாரில், புலன் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, 250 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்

கடந்த மார்ச் மாதம், கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர், பேராசிரியர் ஹரிபத்மன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்தனர். இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் மற்றும் பேராசிரியர் என 60க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். புலன் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி