கடந்தாண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட காடுவெட்டி குரு மணிமண்டப பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அதனை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி பெயர் பலகையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். ராமதாசுடன் கருத்து மோதலில் இருந்து வந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.