தமிழ்நாடு

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.

தந்தி டிவி

கூடுதல் சிறப்பாக, திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியில் கடந்த ஆண்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும், டாப்சிலிப் முகாமில், தலைப் பொங்கலை கொண்டாடியது. சின்னதம்பியுடன் சுற்றுலாபயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

காணும் பொங்கலை கொண்டாட டாப்சிலிப்பிற்கு வந்த நிலையில், யானைகளுடன் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை