மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டும், மஹாபுஷ்கர விழாவை வரவேற்கும் விதமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் ஆதி பழங்குடியின காணி மக்கள், விடிய விடிய 'சாத்துப்பாட்டு' பாடி தாமிரபரணி நதியை வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.