தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.யால் 12 கோடி பேர் வேலை இழப்பு.. காங். தேர்தல் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தி டிவி

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதிமுக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வர்த்தகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், பணமதிப்பிழப்பு காரணமாக 8 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?