தமிழ்நாடு

ராதாபுரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டோர் புகாரின் பேரில் இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகன்குறிச்சி பகுதியில் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வரும் வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கபட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பீட்டர் மார்ட்டினை கைதுசெய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி