தமிழ்நாடு

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஜீவ சமாதி என்ற பெயரில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை

மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம், விழா கமிட்டியை சேர்ந்த கண்ணன் ஆனந்த் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்த நிலையில், ஆய்வாளர் சீராளன் தலைமையில் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளிகளான லெட்சுமணன், கர்ணன் ஆகிய 2 பேரை தேடி வருகிறனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வாளர் சீராளன், ஆன்மீகத்தின் மீது உள்ள அதீத நம்பிக்கையால் மக்கள் மோசடி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்