தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு தினம் : அ.தி.மு.க-வினர் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொண்டர்கள், அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நினைவஞ்சலி ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது. சாத்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்குராந்தலில் நிறைவுபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் சென்ற அ.தி.மு.கவினர், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை