தமிழ்நாடு

ஜெ.அன்பழகன் மறைவு மூலம் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலி இடம் 3ஆக உயர்வு

ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

இந்தாண்டு துவக்கத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி மரணமடைந்தார். இதை அடுத்து சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியானது. தற்போது ஜெ.அன்பழகன் காலமானதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் காலி இடங்கள் 3ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 98ல் இருந்து 97ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 124ஆகவும், திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 97ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், சுயேட்சை, நியமனம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தலா ஒன்றாக உள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்