தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, வெளி நபர்களால் வன்முறை ஏற்பட்டது என பலர் தெரிவித்துள்ளதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்

தந்தி டிவி
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் 9ஆம் கட்ட விசாரணையை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தொடங்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் மட்டும் விசாரணைக்காக 188 பேருக்கு சம்மன் கொடுக்கப்பட்டதாகவும் 119 பேர் ஆஜராகி விளக்கம் தந்ததாகவும் தெரிவித்தார். மதுரையில் இன்னும் 6 மாதம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும் 8 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை நடந்த விசாரணையில், காவல்துறைக்கு ஆதரவாக பலர் சாட்சியம் அளித்துள்ளதாகவும், வெளி நபர்களால் தான் வன்முறை நிகழ்ந்தாக அவர்கள் கூறியதாகவும் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்