அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவதில் கிராம மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், ஆட்சியர் அனைவரையும் அழைத்து பேசி வருகிறார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக இணையத்தில் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை உறுதி என்று கிராமம் முழுவதும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.