தமிழ்நாடு

மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி

மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலூர் கூத்தப்பன்பட்டியில் உள்ள நாகம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீர‌ர்களும் பங்கேற்றனர். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். காளைகளை அடக்கும் முயற்சியில் 5 மாடு பிடி வீர‌ர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்