தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டை நடத்தலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின் போது, மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டு விழா குழு தலைவராக செயல்பட்டு அதனை நடத்தலாமே என யோசனை தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டினை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"